Thursday, February 8, 2018

தமிழிசையின் அபஸ்வரம் ( ? )

கத்தியினைக்  கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுவது
ஆங்கிலேயர் கலாச்சாரம்
அது நம்முடையதில்லை

தமிழக கலாச்சாரப்படி
கத்தி குத்துவதற்கு
அரிவாள் வெட்டுவதற்கு

அது தலை ஆயினும்
பிறந்த நாள் கேக் ஆயினும்..

மாறிச் செய்வது
நம் மரபல்ல

சந்தேகம் எனில்
பரம்பரைக் குறித்த நினைப்பிலேயே
நாளும் வாழும்
இயக்குநரைக் கேட்டிருக்கலாம்

இது அறியாது தமிழிசை அவர்கள்
அரிவாள் கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுதலை

அதுவும்
ஒரு முன்னணி ரவுடி வெட்டுவதை
ரவுடிகள் சூழ  வெட்டுதலை

தமிழக சட்டம் ஒழுங்கோடு
பிணைத்துப் பார்ப்பது
நிச்சயம் அபஸ்வரமே

அமைதிப்  பூங்காவான  தமிழகத்தின்
பண்பாட்டுக் காவலர்கள்  ( ? )நாங்கள்
இதை வன்மையாய்க் கண்டிக்கிறோம்

3 comments:

Seeni said...

பகிர்வுக்கு நன்றி அய்யா..

V.GOPALAKRISHNAN said...

Even for all important days not only cutting cake but blowing off the lamp is a bad adoption of western custom instead of keeping it glowing which is our Hindu culture and custom to remove darkness Thamasoma Jyothirgamaya

சிவகுமாரன் said...

வாளோடு .............. முன் தோன்றிய மூத்த குடி அல்லவா

Post a Comment