Sunday, February 19, 2017

122 இன் மனச்சாட்சி யும் மக்களின் எதிர்ச்சாட்சியும்

122 இன் மனச்சாட்சி : 

"நீங்கள் ஒருவகையில்
மாஃபியா கும்பலின்
அட்டகாசங்களை அழிக்க
முயன்றால்

நாங்கள் ஒருவகையில்
அதன் அட்டூழியங்களை
அழிக்க முயல்கிறோம்

குடிபோதையில் கையில்
ஆயுதங்களை வைத்து
மிரட்டுபவனை
அடக்க நினைத்தால்..

முதலில் எப்படியும்
அவன் கையில் உள்ள
ஆயுதத்தைக் கைப்பற்ற
முயற்சிக்கவேண்டும்

இல்லையேல்
அப்பாவி ஜனங்களுக்கு
நிச்சயம் ஆபத்துத்தான்

அந்த மாஃபியா கும்பலிடம்
உள்ள வலிய ஆயுதமே
பணபலமே

அதைக் குறைக்கவே
நாங்கள் உல்லாச உலகத்தில்
சில நாள் உலவினோம்

பேரத்திற்கு சம்மதித்தோம்

அரசு பறிக்க இருக்கிற
130 உடன்
எங்கள் வகையிலும்

 நிச்சயம் போகுமானால்

நிச்சயம் கொட்டம்
அடங்கத்தானே செய்யும்

அவர்கள் கொட்டத்தை அடக்க
உங்கள் வழி
தேர்தல் என்றால்
எங்கள் வழி
தேர்தலைச் சந்திக்கத்
திராணியற்றுப் போகவைப்பதே
எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நாங்களும் பாதிக்கப்படாது
உங்களுக்கென
செலவழித்த காசைத் தேற்ற
இது ஒன்றே சுருக்கு வழி  

நம் இருவருக்கும்
வழிதான் வேறு வேறு
இலக்கு ஒன்றுதான்

இலக்கில் கூடிய விரைவில்
சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்  ...."

மக்களின் எதிர்ச்சாட்சி :

"சோரம் போனவர்கள் எல்லாம்
அதற்கு ஒரு
மிகச் சரியான காரணம் வைத்திருப்பார்கள்
உங்களதும் அந்த வகையே

மகா எரிச்சலுடன்... 

7 comments:

அன்பே சிவம் said...

தமிழரென்று கர்வத்துடன் திரிந்த நமக்கு. பாடம் கற்பிக்க துணிந்தனர் படு பாவிகள். இனி உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.

ஸ்ரீராம். said...

மகா எரிச்சலுடன்....

ஆமாம். உண்மை.

தி.தமிழ் இளங்கோ said...

இப்போதெல்லாம் நடப்பது சூழ்ச்சி அரசியல் சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தி.தமிழ் இளங்கோ ஐயா சொன்னது தான் சரி...

இராய செல்லப்பா said...

அடடே, நம்ம எம்எல்ஏக்கள் இவ்வளவு விவரமானவர்களா?

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Unknown said...

Lateralthinkingவித்தியாசமானசிந்தனை வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

எரிச்சலோ எரிச்சல்....

Post a Comment